search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசீய கீதம்"

    • சட்டமன்ற கூட்ட தொடரில் பாதியிலேயே திரும்பி சென்றது.
    • கவர்னர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும், கூட்டத் தொடரில் பாதியிலேயே திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தஞ்சை ரெயிலடியில் இன்று மதியம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது கவர்னர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என கூறி அவரை கண்டித்து கோசங்கள் எழுப்பி கருப்புக் கொடி காட்டினர்.

    இதனைத் தொடர்ந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×