search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய புலனாய்வு அதிகாரிகள்"

    ‘வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய கும்பலை சேர்ந்த 4 பேர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ரகசிய கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த 10 பேர் கொண்ட கும்பலை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர். “வீரமரணம் எங்கள் இலக்கு” என்று குறிப்பிட்டு அவர்கள் ‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து செயல்பட்டு வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அவர்களில் சிலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகி வெளியில் வந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்த அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ‘வாட்ஸ்-அப்’ கும்பல் குறித்த விவரங்களின் அடிப்படையில் அவர்கள் கூட்டம் நடத்திய விவரங்கள், சென்று வந்த இடங்கள், பின்னணி, சந்தித்த நபர்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதாவது கீழக்கரையில் ஒருவரும், தேவிபட்டினம் பகுதியில் 3 பேரும் சம்பந்தப்பட்டிருப்பதால் தேசிய புலனாய்வு தனிப்படையினர் அந்த 4 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 போலீசாரின் உதவியுடன் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது ‘வாட்ஸ்-அப்’ குழு தொடர்பான வழக்கில் சிக்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்ததாக தெரிகிறது. இந்த சோதனையில் சில ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பில் உள்ளார்களா, அதுதொடர்பான தகவல் பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா? என்ற கண்ணோட்டத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை போல், வாட்ஸ்-அப் குழு வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேர் வீடுகளிலும் அந்தந்த பகுதி போலீசார் ஒத்துழைப்புடன் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
    டெல்லி மற்றும் உபியில் கைது செய்யப்பட்ட 10 பயங்கரவாதிகள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு அளித்துள்ளது. #ISISModuleCase #NIA
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதன்மூலம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொல்லவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களின் முகங்களை துணியால் மறைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். 10 பேரிடம் இருந்தும் மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்ஐஏ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  #ISISModuleCase #NIA
    உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவு இயக்கமான ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 10 பேர் கைதாகினர். #NIAdetains #NIAprobe #ISISmodule
    புதுடெல்லி:

    சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

    ‘ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம்’ என்னும் அமைப்பின் மூலம் இவர்கள் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
    கைதானவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர். #NIAdetains #NIAprobe #ISISmodule
    ×