search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIA officers arrest"

    டெல்லி மற்றும் உபியில் கைது செய்யப்பட்ட 10 பயங்கரவாதிகள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு அளித்துள்ளது. #ISISModuleCase #NIA
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதன்மூலம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொல்லவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களின் முகங்களை துணியால் மறைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். 10 பேரிடம் இருந்தும் மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்ஐஏ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  #ISISModuleCase #NIA
    உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவு இயக்கமான ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 10 பேர் கைதாகினர். #NIAdetains #NIAprobe #ISISmodule
    புதுடெல்லி:

    சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

    ‘ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம்’ என்னும் அமைப்பின் மூலம் இவர்கள் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
    கைதானவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர். #NIAdetains #NIAprobe #ISISmodule
    ×