search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி, உ.பி.யில் அதிரடி வேட்டை - ஐஎஸ் பயங்கரவாத ஆதரவு இயக்கத்தினர் 10 பேர் கைது
    X

    டெல்லி, உ.பி.யில் அதிரடி வேட்டை - ஐஎஸ் பயங்கரவாத ஆதரவு இயக்கத்தினர் 10 பேர் கைது

    உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவு இயக்கமான ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 10 பேர் கைதாகினர். #NIAdetains #NIAprobe #ISISmodule
    புதுடெல்லி:

    சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

    ‘ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம்’ என்னும் அமைப்பின் மூலம் இவர்கள் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
    கைதானவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர். #NIAdetains #NIAprobe #ISISmodule
    Next Story
    ×