என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேசிய களரி போட்டி"
- 37 -வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
- பணி நிறைவு அலுவலர் கணேசன் , சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
உடுமலை:
இந்திய அணி சார்பாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 37 -வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் களரி போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 12மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்டஸ் அறக்கட்டளை சார்பில் ஆசான் வீரமணி தலைமையில் தமிழ்நாடு அணிக்காக 8 பேர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் உடுமலையிலிருந்து ெரயில் மூலம் கோவை சென்று கோவையில் இருந்து ெரயில் மூலம் கோவா செல்கின்றனர். கோவா செல்லும் களரி வீரர்கள் உடுமலையிலிருந்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு, மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் வடிவேல், பணி நிறைவு அலுவலர் கணேசன் , சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
- சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர்.
- டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர் :
ஹரியானா மாநிலம் சண்டிகர் மாவட்டம் பஞ்சகுல்லாவில் கேலோ இந்தியா போட்டி நடந்தது. 13 மாநிலங்களை சேர்ந்த 231 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 25 பேர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 11 பேர் கலந்து கொண்டனர். இதில் சுர்ஜித், ஜீவா இருவரும் தங்கம் வென்று அசத்தினர். சுவேதா வெள்ளி வென்றார். இன்பதமிழன், யுவனேஸ்வர், பத்மேஷ்ராஜ், ஜூவா, செகுவரா, சுவேதா, திவ்யதர்ஷினி, சுருதி ஆகிய 8பேர் வெண்கலம் வென்றனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம், களரி பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றினர்.கேலோ இந்தியாபோட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் திரும்பிய மாணவர்களுக்கு ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தலைமையில் அக்கட்சியினர், டி.ஒய்.எப்.ஐ., விளையாட்டு கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்