search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி எம்பி"

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

    நேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.



    இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

    ×