search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கில் ஆண் பிணம்"

    ஆற்காடு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த பாலி கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள தேக்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் செய்யாறு அடுத்த மோரணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சக்கரதாரி (வயது 60). என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×