என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துப்பாக்கி சுடும் பயிற்சி"
- 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
- 72 பேர் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
வேலூர்:
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள் பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலு தவி அளித்தல், நன்ன டத்தை, கலவரத்தை கட்டுப்ப டுத்துவது, சட் டம் மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலை யங்களில் பணியாற்றுவது நீதிமன்றத்தில் கைதியை ஆஜர் படுத்துவது, எஸ்பி அலுவலக பணிகள் ஆகியன குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
துப்பாக்கி சுடும்
இந்த நிலையில், வேலூர் அடுத்த சலமநத்தம் துப் பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது.
இதற்காக காவலர் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2-ம் நிலை பெண் காவலர்கள் 72 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ஏகே 47, எஸ்.எல்.ஆர். உள்ளிட்ட துப்பாக்கிகள் சுடும் பயிற்சி மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மீதமுள்ள 2-ம் நிலை பெண் காவலர்க ளுக்கு அடுத்தடுத்து பயிற்சி வழங்கப்படும் என காவலர் பயிற்சி பள்ளி போலீசார் தெரிவித்தனர்.
- காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.
- இப்பயிற்சியில் பள்ளி முதல்வர் மாவட்ட எஸ்.பி.கலைசெல்வன், தலைமையில் துணை முதல்வர்,டி.எஸ்.பி. பாஸ்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப் இன்ஸ்பெக்டர் சின்னசாமி ஆகியோர் வழங்கினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஆயுத படை யில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.
இந்தாண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 220 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கான பயிற்சி கடந்த மார்ச் 14 ம் தொடங்கியது.
தொடர்ந்து போலீசாருக் கான அடிப்படை பயிற்சிகள், உடற் பயிற்சிகள், கவாத்து பயிற்சி,ஆயுதபயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி,சட்ட பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் கொடுக்க படுகிறது.
இதில் நேற்று தருமபுரி அருகே ஒடசல்பட்டி மூக்கனூர் வனப்பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் பள்ளி முதல்வர் மாவட்ட எஸ்.பி.கலைசெல்வன், தலைமையில் துணை முதல்வர்,டி.எஸ்.பி. பாஸ்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப் இன்ஸ்பெக்டர் சின்னசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஏ.கே.47, எஸ்.எல்.ஆர்,303,410 மஸ்கட்,9எம்.எம்.கார்பைன்,.22 என ஆறு வகையான துப்பாக்கிகள் மூலம் எவ்வாறு சுடுவது, எவ்வாறு பயன்படுத்துவது,என சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகிறது.
இந்த பயிற்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்