search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபிகா படுகோனே திருமணம்"

    பெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #DeepVeerReception #DeepVeer
    இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 

    நேற்று நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 



    அடுத்ததாக வரும் 27-ஆம் தேதி, ரன்வீர் சிங் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் நடைபெறுகிறது. #DeepVeerReception #DeepVeer 

    இத்தாலியில் திருமணத்தை முடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி, தற்போது மும்பை திரும்பியுள்ளனர். #DeepikaPadukone #RanveerSingh
    இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். 

    15ம் தேதி லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 



    வருகிற 21ம் தேதி பெங்களூருவிலும், 28ம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh 
    பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் வைத்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. #DeepikaPadukone #RanveerSingh
    இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். 

    அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லோக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபீகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.



    திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களின் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர். திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

    திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadukone #RanveerSingh 

    பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவுக்கும்ம், ரன்வீர் சிங்குக்கும் இத்தாலியில் வைத்து வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone
    பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் மேக்கப் போடாமல் சென்ற இருவரையும் இந்திய பெண் ஒருவர் அடையாளம் கண்டு வீடியோ எடுத்ததை தீபிகா படுகோனே கண்டித்து அந்த பெண்ணை தாக்கியதாகவும் தகவல்கள் வந்தன. தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

    இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 20-ந் தேதி இத்தாலியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமான சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    எளிமையான முறையில் திருமணத்தை நடத்திவிட்டு, இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #DeepikaPadukone #RanveerSingh 

    பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே காதலித்து வரும் நிலையில், அவர்களது திருமண ஏற்பாட்டில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone
    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் - தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் திருமண பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் அச்சடித்தல், திருமணத்துக்கு அழைக்க வேண்டியவர்கள் பட்டியல் தயாரித்தல், வரவேற்புகளை கவனித்தல், ஓட்டலில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட ஒவ்வொரு பணிக்கும் ஆட்களை நியமித்து வருகிறார்கள். இத்தாலியில் இவர்களது திருமணம் நடக்கிறது.

    விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட அதே ஓட்டலில், ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணமும் நடக்க உள்ளது.



    மும்பையில் இருந்து இருவீட்டாரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனி விமானம் மூலம் இத்தாலிக்கு செல்கிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இருவரும் கைவசம் இருக்கும் படங்களை விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

    இவர்களது நடிப்பில் கடைசியாக வெளியான பத்மாவத் படம் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadukone #RanveerSingh

    பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh
    தமிழில் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியா ‘பத்மாவத்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும், கொலை மிரட்டல்களையும் சந்தித்தார்.

    இதே படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் அந்த நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் தீபிகா படுகோனேவுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.



    நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்திருக்கிறது.

    தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று பாலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    இந்த நிலையில் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரன்வீர்சிங் கூறும்போது ‘எனது திருமணம் இந்த வருடம் நடக்கும்’ என்றார். #DeepikaPadukone #RanveerSingh

    ×