என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவிழாவில் மோதல்"
- ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரால் நடந்த மோதல் சம்பவத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- முதல் கட்டமாக அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு சமூகத்தினர் சித்திரை வெண்கொடை திருவிழாவை விமரிசையாக நடத்துவார்கள்.
இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கானோர் ஆடி-பாடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அதன்படி தமிழ் புத்தாண்டான நேற்று ராஜபாளையத்தில் சித்திரை வெண்கொடை திருவிழா நடந்தது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று காலை ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் வெண்கொடையுடன் ஆடி வந்தனர். மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த ஊர்வலம் மதியம் அய்யனார் கோவிலை சென்றடைந்தது.
பின்னர் மாலையில் மீண்டும் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் கோஷமிட்டுக் கொண்டு ஆடி வந்தனர். சம்பந்தபுரம் பகுதியில் வந்தபோது அதே சமூகத்தில் 2 பிரிவினருக்கு இடையே ஆடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அவதூறான வார்த்தைகளால் பேசினர்.
சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது. இருதரப்பை சேர்ந்தவர்களும் ரோட்டில் கிடந்த கற்கள், கம்பை எடுத்து சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த போலீசார் உடனே தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஊர்வலம் வந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.இந்த மோதலில் கல்வீசி தாக்கியதில் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் காயமடைந்தனர்.
விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர்களான மதுரை மாவட்டம் நொச்சிக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் (வயது32), விருதுநகர் மாவட்டம் சத்தியரெட்டியபட்டியை சேர்ந்த ராஜா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரால் நடந்த மோதல் சம்பவத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று நடந்த மோதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் கட்டமாக அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிழக்குமேடு பகுதியில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகின்றது.
- மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிழக்குமேடு பகுதியில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகின்றது, இங்கு கோவில் கம்பம் நடுவது மற்றும் சாமியை தூக்குவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 29), ஆனந்த் (19) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி இரு தரப்பை சேர்ந்த ஆனந்த், செல்வம், லட்சுமி, கலைவாணி, யமுனா,தமிழரசன், ரவி, பரத், சீரங்கன், சதீஷ்குமார், முனி, மலர், பிரியா ஆகிய 13 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்