search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகேகோவில் திருவிழாவில் மோதல்
    X

    தாரமங்கலம் அருகேகோவில் திருவிழாவில் மோதல்

    • தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிழக்குமேடு பகுதியில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகின்றது.
    • மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிழக்குமேடு பகுதியில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகின்றது, இங்கு கோவில் கம்பம் நடுவது மற்றும் சாமியை தூக்குவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 29), ஆனந்த் (19) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி இரு தரப்பை சேர்ந்த ஆனந்த், செல்வம், லட்சுமி, கலைவாணி, யமுனா,தமிழரசன், ரவி, பரத், சீரங்கன், சதீஷ்குமார், முனி, மலர், பிரியா ஆகிய 13 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×