search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு வாலிபர் கைது"

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள பழைய ரெயில்வே குடி யிருப்பில் வசித்து வருபவர் பிரேந்திர குமார் (வயது27). இவர் நேற்று வீட் டில் இருந்தபோது அருகில் பூட்டப்பட்டிருந்த ரெயில்வே குடியிருப்பின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தார்.

    இதை அறிந்த பிரேந்திரகு மார் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரி வித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

    விசாரணையில் அவர் ஏல கிரி கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இளம்பருதி (40) என்பது தெரிய வந்தது.

    மேலும் இதுகுறித்து பிரேந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கப்பதிந்து இளம்பருதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது.
    • போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டில் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேலும் பாத்திரங்கள், பேன் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டபோது படுக்கையறையில் வாலிபர் ஒருவர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.

    படுக்கையறை அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்தன. போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பினர். தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த வாலிபர் தன் முன்னே போலீசார் நிற்பதை கண்டு திருதிருவென முழித்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது27) என்பது தெரியவந்தது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த இவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்துள்ளார்.

    பின்னர் வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது. அதன்படி இரண்டையும் சாப்பிட்ட பின் அவனுக்கு போதை தலைக்கு ஏறியது. சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என படுக்கையறையில் சுதந்திரநாதன் தூங்கியது தெரியவந்தது. போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.

    திருட வந்த வீட்டில் வாலிபர் தூங்கி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை கைது செய்த வீடியோவும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    ×