search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் குழந்தை பலி"

    அம்பலூர் அருகே குடிசை வீடு எரிந்து தாய், குழந்தை உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், அம்பலூர் அருகே உள்ள தும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). மகள் தனலெட்சுமி (2) வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் சிம்னி விளக்கு பயன்படுத்தி வந்தனர்.

    நேற்று இரவு 10 மணிக்கு நந்தீஸ்வரன் வெளியே சென்றிருந்தார். அப்போது சரஸ்வதி குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்த சிம்னி விளக்கு திடீரென சரிந்து குடிசையில் தீப்பற்றியது.

    வேகமாக பரவிய தீ குடிசை முழுவதும் எரிந்தது. வீட்டிற்குள் இருந்த சரஸ்வதி குழந்தை தனலெட்சுமி உடல் கருகினர். அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். அதற்குள் உடல் கருகிய சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

    தீக்காயத்துடன் துடித்த குழந்தையை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே குழந்தை உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரஸ்வதிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இதனையடுத்து அவரது கணவரிடம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். #Fireaccident

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரேஷ்குமார். இவரது மனைவி ஹன்சிகா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஹன்சிகா திடீரென உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் ஹன்சிகா மற்றும் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டாக்டர்களுக்கும், ஹன்சிகாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனிடையே அங்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக வந்திருந்த போலீசார், ஹன்சிகாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மருத்துவக்கல்லூரி மகப்பேறு துறை தலைவர் கற்பகம் கூறும்போது, அனுசுயா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்தநிலையில் தான் அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

    நாங்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். இருப்பினும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு இருந்ததாலும், ரத்த அணுக்கள் மிகக்குறைவாக இருந்ததாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையும் இறந்து விட்டது.

    இதுகுறித்து அவரது உறவினர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாகவும், சரியான புரிதல் இல்லாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே போலீசார் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து ஹன்சிகாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தாய்-சேய் உடலை பெற்று சென்றனர்.

    பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×