search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தறிப்பட்டறை உரிமையாளர்"

    • முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    ஈரோடு மாணிக்க ம்பாளையம், ஆண்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (43). இவரது மனைவி சவிதா. வீட்டின் கீழ் பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். மேல் பகுதியில் அவரது வீடு உள்ளது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று முரளியின் மகன் கீழ் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். சவிதா தறிப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மேல் வீட்டில் முரளி மட்டும் இருந்துள்ளார். முரளியின் இளைய மகன் தண்ணீர் குடிப்பதற்காக மேல் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு தாழிடப்ப ட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது தந்தை முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் இது குறித்து தனது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டுவலசு அடுத்த சைவ மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரகிருஷ்ணன்(43). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுந்தரகிருஷ்ணன் தனது தம்பியுடன் சேர்ந்து தறிப்பட்டறை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் அனைவரும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டனர்.

    சுந்தரகிருஷ்ணன் தறி பட்டறைக்கு சென்று விட்டு பின்னர் விசேஷத்திற்கு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் விசேஷத்திற்கு வராததால் அவரது தம்பி தறிப்பட்டறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சுந்தரகிருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சுந்தரகிருஷ்ணன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×