search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தையை கொன்ற மகன்"

    • பெண்ணுக்கு அண்ணாமலைக்கு சொந்தமான நிலத்தை எழுதிக் கொடுப்பதாக சொல்லி இருந்தார்.
    • இந்த தகவல் அறிந்த அவருடைய மகன் அரவிந்த் தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 55). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். பெண்ணை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

    அந்தப் பெண்ணுக்கு அண்ணாமலைக்கு சொந்தமான நிலத்தை எழுதிக் கொடுப்பதாக சொல்லி இருந்தார். இந்த தகவல் அறிந்த அவருடைய மகன் அரவிந்த் (23) தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் மறுத்து விட்டு பெண்ணுக்கு தான் எழுதிக் கொடுப்பேன். நீ எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய். அதனால் உனக்கு நான் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.

    இதை மனதில் வைத்துக் கொண்ட அரவிந்த் நேற்று இரவு அண்ணாமலை தூங்கிக் கொண்டிருந்தபோது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.

    இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் திருநாவலூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பிணமாக கிடந்த அண்ணாமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்த அரவிந்தையும் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இதுபற்றி பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்துபனை கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் அந்த பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கவின் (வயது 23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் பழனிசாமி அவரது மனைவி மஞ்சுளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அவரது மகன் கவின் இதை கண்டித்தார். எனினும் பழனிசாமி மனைவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இது கவினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அடிக்கடி தனது தாயிடம் தகராறு செய்வதால் வேதனை அடைந்த கவின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கவின் அருகில் கிடந்த கல்லால் தந்தை பழனிசாமியின் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த கவின் அங்கே இருந்து தலைமறைவானார். இதுபற்றி பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கவினை தேடி வருகிறார்கள். கவினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கூலி வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×