உளுந்தூர்பேட்டை அருகே குடிபோதையில் கல்லால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

பெண்ணுக்கு அண்ணாமலைக்கு சொந்தமான நிலத்தை எழுதிக் கொடுப்பதாக சொல்லி இருந்தார். இந்த தகவல் அறிந்த அவருடைய மகன் அரவிந்த் தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே குடிபோதையில் கல்லால் தாக்கி தந்தையை கொன்ற மகன்
Published on

திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 55). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். பெண்ணை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

அந்தப் பெண்ணுக்கு அண்ணாமலைக்கு சொந்தமான நிலத்தை எழுதிக் கொடுப்பதாக சொல்லி இருந்தார். இந்த தகவல் அறிந்த அவருடைய மகன் அரவிந்த் (23) தந்தையிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுத்து விட்டு பெண்ணுக்கு தான் எழுதிக் கொடுப்பேன். நீ எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய். அதனால் உனக்கு நான் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.

இதை மனதில் வைத்துக் கொண்ட அரவிந்த் நேற்று இரவு அண்ணாமலை தூங்கிக் கொண்டிருந்தபோது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் திருநாவலூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த அண்ணாமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்த அரவிந்தையும் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com