என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிபாளையம் அருகே தையல் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற மகன்
- தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதுபற்றி பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்துபனை கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் அந்த பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கவின் (வயது 23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் பழனிசாமி அவரது மனைவி மஞ்சுளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அவரது மகன் கவின் இதை கண்டித்தார். எனினும் பழனிசாமி மனைவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இது கவினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அடிக்கடி தனது தாயிடம் தகராறு செய்வதால் வேதனை அடைந்த கவின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கவின் அருகில் கிடந்த கல்லால் தந்தை பழனிசாமியின் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த கவின் அங்கே இருந்து தலைமறைவானார். இதுபற்றி பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கவினை தேடி வருகிறார்கள். கவினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கூலி வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்