search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை கடும் சரிவு"

    • தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
    • அய்யலூர் சந்தையில் 15 கிேலா கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. மாலை நேரத்தில் நடைபெறும் இந்த தக்காளி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான கொம்பேறிபட்டி, கல்பட்டிசத்திரம், குருந்தம்பட்டி, கடவூர், நடுப்பட்டி, மோர்பட்டி, தீர்த்தாகிழவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் கனமழை பெய்ததால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் 1 கிலோ ரூ.200 வரை விற்பனையானது. அப்போது பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அய்யலூர் சந்தையில் 15 கிேலா கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது. 1 கிலோ ரூ.5 க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    மேலும் வியாபாரிகளும் தக்காளி வாங்க ஆர்வம் காட்டாததால் பெருமளவு தேக்கமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டி சென்றனர்.

    • தற்போது ஒரு பெட்டி ரூ.150லிருந்து ரூ.300 வரை தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.
    • அதிகளவில் பயிரிட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, காவேரியம்மாபட்டி, இடையகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தக்காளி, கத்தரிஉள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சராசரியாக 2000 பெட்டிகள் விவசாயிகளால் கொண்டுவரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு மேல் விலை விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் கடும் அவதியடைந்தனர். சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேசன்கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. இருந்தபோதும் விலை குறையாமலேயே இருந்தது.

    அப்போதும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி சென்று வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றனர். இந்தநிலையில் தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1300 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விலை கேட்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஒரு பெட்டி ரூ.150லிருந்து ரூ.300 வரை தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.20 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சில்லரை விலையில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். அதிகளவில் பயிரிட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமையாக சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தக்காளி 1 கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள்
    • தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வடதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு தனி மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்க ளான மோர்பட்டி, தீத்தா கிழவனூர், நடுப்பட்டி, கல்பட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

    சென்னை, கோவை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளிமாநில தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கிராமங்களிலும் அதிக அளவில் தக்காளி விளைந்துள்ளது. இதனால் அய்யலூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்ப ட்டது.

    தரமான தக்காளிகள் 2 முதல் 5 வரை ஏலம் போனது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.170 வரை விற்பனை யானது. ஒரு கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனை யடைந்த விவசாயிகள் தக்காளி களை சாலை யோரம் வீசி சென்றனர்.

    இங்கு தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.


    • தக்காளி பழங்களை சேமித்து வைத்தால் பொதுமக்களும் பாதிப்படையாமல் சராசரி விலைக்கு பழங்களை வாங்கி செல்லலாம்.
    • தக்காளியின் விலை படு வீழ்ச்சி அடைந்து 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    தருமபுரி,

    பொதுமக்களின் உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது தக்காளியாகும், அனைத்து மாநில மக்களின் இல்லத்தரசிகளின் உணவு தயாரிப்பில் முக்கிய உணவு பொருளாக இருந்து வருகிறது.

    தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது. தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கும் உதவுகின்றன.

    இத்தனை சிறப்பு வாய்ந்த தக்காளி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதேபோல் வெளி மாநிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. சில சமயங்களில் தமிழகத்தில் தக்காளி தட்டுப்பாடு வரும்போது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி பழம் இறக்குமதி செய்யப்படுகிறது.

    அதிகமாக வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான மழையின் காரணமாகவும் தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுவதால் அந்த சமயங்களில் தக்காளியின் விலை கிலோ 50 முதல் 120 வரை விலை உச்சத்தை எட்டுகிறது.

    அந்த சமயங்களில் இல்லத்தரசிகளின் வேதனையான புலம்பல் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

    அதிகமாக தேவைப்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர்.

    சராசரியாக மிதமான பருவ காலங்களில் தக்காளியின் விளைச்சல் அமோகமாக இருக்கும். அந்த காலங்களில் தக்காளியின் விலை படு வீழ்ச்சி அடைந்து 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு தக்காளி பழ அறுவடை கூலி கொடுக்க முடியாமல் பழங்களை செடிகளிலேயே பறிக்காமல் விடும் சூழ்நிலை உள்ளது. சில சமயங்களில் ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு அவலமும் நடக்கிறது.

    இது போன்ற சமயங்களில் தமிழக அரசு தருமபுரி மாவட்டத்தில் தாலுகாவிற்கு ஒரு மதிப்பு கூட்டும் ஆலையை அமைத்து கொடுத்தால் அந்தந்த தாலுகாவில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தக்காளி பழங்களை மதிப்பு கூட்டும் ஆலைகளுக்கு கொடுக்கும்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.

    மேலும் கோடைக்கு முன்பும், பருவ மழைக்கு முன்பும் சேமிப்பு கிடங்குகளில் முன்கூட்டியே தக்காளி பழங்களை சேமித்து வைத்தால் பொதுமக்களும் பாதிப்படையாமல் சராசரி விலைக்கு பழங்களை வாங்கி செல்லலாம்.

    விளைச்சல் அதிகரிக்கும் சமயங்களில் தக்காளி பழங்களை குளிரூட்டும் சேமிப்பு கிடங்குகளில் வேளாண்மை துறையினரின் கட்டுபாட்டில் சேமித்து வைக்க தொடங்கினால் வரும் வடமேற்கு பருவமழை காலங்களில் தக்காளியின் விலையை சமாளிக்கலாம்.

    மேலும் இது போன்ற சமயங்களில் அரசு கொள்முதல் செய்யும் பொழுது விவசாயிகளும் பாதிப்படையாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×