search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் பகுதியில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடும் சரிவு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட தக்காளி.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை கடும் சரிவு

    • தற்போது ஒரு பெட்டி ரூ.150லிருந்து ரூ.300 வரை தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.
    • அதிகளவில் பயிரிட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, காவேரியம்மாபட்டி, இடையகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தக்காளி, கத்தரிஉள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சராசரியாக 2000 பெட்டிகள் விவசாயிகளால் கொண்டுவரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு மேல் விலை விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் கடும் அவதியடைந்தனர். சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேசன்கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. இருந்தபோதும் விலை குறையாமலேயே இருந்தது.

    அப்போதும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி சென்று வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றனர். இந்தநிலையில் தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1300 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விலை கேட்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஒரு பெட்டி ரூ.150லிருந்து ரூ.300 வரை தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.20 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சில்லரை விலையில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். அதிகளவில் பயிரிட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமையாக சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×