என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tomatoes has fallen"
- தக்காளி 1 கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள்
- தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வடதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு தனி மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்க ளான மோர்பட்டி, தீத்தா கிழவனூர், நடுப்பட்டி, கல்பட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
சென்னை, கோவை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளிமாநில தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கிராமங்களிலும் அதிக அளவில் தக்காளி விளைந்துள்ளது. இதனால் அய்யலூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்ப ட்டது.
தரமான தக்காளிகள் 2 முதல் 5 வரை ஏலம் போனது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.170 வரை விற்பனை யானது. ஒரு கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனை யடைந்த விவசாயிகள் தக்காளி களை சாலை யோரம் வீசி சென்றனர்.
இங்கு தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்