search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா விவசாயம்"

    • பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ளனர்.
    • கடந்த ஆண்டு நெல் உற்பத்தியை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்து விட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கினார். அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் சேது சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுகளை பெற்றபடி சென்றார்.

    மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. நமது நாடு 9 ஆண்டுகளில் பெருளாதாரத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பார்த்து வருகிறீர்கள்.

    பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களும் பாதயாத்திரைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் சொல்வது என்னவென்றால் வெளிநாடுகளில் இந்தியன் என்று சொல்வது பெருமையாக உள்ளது என்கின்றனர்.


    காங்கிரஸ் கடைசியாக ஆட்சியில் இருந்த போது கொப்பரை தேங்காயின் ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.52.50 ஆக இருந்தது. ஆனால், தற்போது ரூ.108.60 ஆக உயர்ந்துள்ளது. 107 சதவீதம் கொப்பரை தேங்காயின் ஆதார விலையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.

    விவசாயம் அல்லாத பல தொழில்களில் இளைஞர்கள் உள்ளனர். அதற்கு மாறாக டெல்டாவில் இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும். அவர்களுக்காக டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. கடந்த ஆண்டு நெல் உற்பத்தியை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்து விட்டது. இது வேதனை அளிக்கிறது.

    இதேநிலை நீடித்தால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த ஆபத்தில் இருந்து டெல்டாவை காப்பாற்ற பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார். பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி சாலையில் தொண்டாகள் புடைசூழ நடந்து சென்றார். பின்னர் அவர் பேசுகையில்:-

    பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். வருகிற 2024-25-ம் ஆண்டில் உறுதியாக நதிநீர் இணைப்பு திட்டம் நடந்தே தீரும். தண்ணீரை வைத்து தான் நமக்கும் அண்டை மாநிலத்திற்கும் பிரச்சினை வருகிறது. விவசாயத்தை காப்பாற்ற பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும். முதல் ஐந்தாண்டு ஆட்சி ஏழை மக்களுக்காக, 2-வது ஐந்தாண்டு ஆட்சி நாட்டின் வளர்ச்சிக்காக, 3-வது ஐந்தாண்டு ஆட்சி நமது விவசாயத்திற்காக தான் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    ×