search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செத்து மிதந்த மீன்கள்"

    • ரசாயன கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்ததால் ஏராளமான மீன்கள் இறந்ததாக கூறப்படு கிறது. மீன்கள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் துர் நாற்றம் வீசிவருகிறது. இதனால்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சண்முகம் இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது.
    • நேற்று முன்தினம் அந்த கிணற்றில் திடீரென 300-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன.

    சேலம்:

    சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிணற்றில் திடீரென 300-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. மேலும் கிணற்றின் தண்ணீரும் நிறம் மாறி, நீல நிறத்தில் காணப்பட்டது. இதனால் கிணற்றில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே விவசாய கிணற்றில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    ×