search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரேஸ் ரெய்னா"

    • ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
    • ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் திலக் வர்மாவை தவிர மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20-யில் தனது முதல் அரை சதம் அடித்தார்.

    இந்நிலையில் எனது உத்வேகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா என்று திலக் வர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா எனது உத்வேகம். ரோகித் பாயுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். என்னுடைய முதல் ஐபிஎல் தொடரில், திலக் நீங்கள் ஒரு அனைத்து வடிவ கிரிக்கெட் வீரர் என்று அவர் என்னிடம் கூறினார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகப்பெரியதாக இருந்தது.

    ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். எப்போதும் என்னிடம் பேசி விளையாட்டை ரசிக்கச் சொல்வார். ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவுக்காக விளையாட எனக்கு இந்த சிறப்பான ஆட்டம் உதவியது. முன்னோக்கி செல்லும் நான் அதை தொடர விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×