search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருதி ஹாசன்"

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுருதி ஹாசன் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில், தனது நீண்ட நாள் எண்ணம் பலித்துவிட்டதாக கூறியுள்ளார். #ShrutiHaasan
    நடிகை சுருதிஹாசன் தமிழில், சிங்கம் 3 படத்தில் நடித்த பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். 

    சமீபத்தில் அவர் ஏதோ ஒரு வி‌ஷயத்தை மறைத்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார். ‘என்னைப் பொறுத்தவரை அது நடந்துவிட்டது. என்ன நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேனோ கடைசியாக உண்மையாகி விட்டது. தற்போதைக்கு நான் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். எல்லா நலன்களையும் இறைவன் எனக்கு அருளி இருக்கிறான்’ என குறிப்பிட்டுள்ளார். 



    இந்த பதிவில் சுருதி எதைப்பற்றி கூறுகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அவரே அதற்கு விடை கூறினால் தான் சுருதியின் சந்தோ‌ஷத்திற்கான காரணம் தெரியவரும். #ShrutiHaasan

    வேலூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்த சுருதிஹாசன் தான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அஜித் தான் என்று கூறினார். #ShrutiHaasan #AjithKumar
    வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ரிவேரா 2019’ என்ற கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நடிகை சுருதிஹாசன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதில் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த படம் ‘மகாநதி’ என்றும், சிறந்த நடிகர் ‘கமல்ஹாசன்’ என்றும் கூறினார். மேலும் தான் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பணிகளில்  ஈடுபடுவதைக் காட்டிலும் ‘என்டர்டெயினராக’ இருப்பதையே பெரிதும் விரும்புவதாக அவர் கூறினார்.



    ‘நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடிக்கும்போது, எந்த படஉலகம் உங்களுக்கு சிறந்ததாகவும், இலகுவாகவும் இருக்கிறது?’ என்று மாணவர்கள் கேட்டதற்கு, தனக்கு ‘தெலுங்கு, தமிழ், இந்தி என எந்தத் துறையாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும், நடிப்பதை தான் விரும்பிச் செய்வதாகத் தெரிவித்தார். பின்பு நடிகர் அஜித் பற்றி கேட்டதற்கு, ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும், நான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அவர்தான்’ என்றும் கூறினார். #ShrutiHaasan #AjithKumar

    மைக்கேல் கார்சலேவுடன் தன்னைப் பற்றி வந்த திருமண செய்திக்கு நடிகை சுருதி ஹாசன் கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார். #Shrutihaasan #Shruti
    நடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கிறார்கள்.

    சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுருதிஹாசன், ‘’என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாக தொடங்கின. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை மட்டுமே தொகுத்து வருகிறார் சுருதிஹாசன்.



    சுருதிஹாசனுக்கு திருமணம் என்ற செய்தியை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்படியா? இதுவே எனக்கு செய்தி தான்” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
    நடிகை சுருதி ஹாசனும், மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், என்னை சிரிக்க வைப்பவன் நீ, இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது என்று சுருதி கூறியுள்ளார். #ShrutiHaasan #MichaelCorsale
    கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான சுருதிஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்கின்றனர்.

    ஆதவ் கண்ணதாசன் - வினோதினி சுரேஷ் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இத்தாலியரான மைக்கேல் கார்சல் பட்டு வேட்டி, சட்டையுடனும், சுருதிஹாசன் பட்டுப்புடவையிலும் திருமணத்துக்கு வந்தனர். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டபோதும் ஒன்றாக கலந்துகொண்டனர்.



    இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். எனவே இருவரும் திருமணம் செய்துகொள்வது உறுதி. கமலும் சம்மதித்துவிட்டார் என்ற செய்திகள் வந்தன. இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுருதிஹாசன், ‘’என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்று தெரிவித்துள்ளார். #ShrutiHaasan #MichaelCorsale

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான சுருதி ஹாசன், தனது அப்பா நான்கு வயதில் இருந்து சினிமா துறையில் இருப்பதால், அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என்று கூறியுள்ளார். #ShrutiHaasan
    சுருதி ஹாசனை கடந்த சிலகாலமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மும்பையில் நடந்த பே‌ஷன் ஷோவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ருதி, “என்னை நானே, சுய பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது.

    அதற்காகத்தான் இந்த ஒரு ஆண்டு இடைவெளி எடுத்தேன். ஒரு ஆண்டு முழுவதும், எந்தப் படங்களிலும் நடிக்காமல் என் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்தேன். இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். என் அப்பாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். என் அம்மாவுடன் நடிக்க விரும்புகிறேன்.

    நானும் அம்மாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். திறமையான நடிகர்களின் மகள் என்பதால், திரையில் தோன்றும் போது அந்த அழுத்தம் உங்களுக்கு அதிகமாகிறதா என்ற கேள்விக்கு, “இது எனது வாழ்க்கை.



    நான் அவர்களைப் பெருமைப்படுத்தவே விரும்பினேன். எனது கடினமாக உழைப்பைக் கண்டு அவர்கள் பெருமைப்படுவதாக அறிகிறேன். நான் எனது சொந்த முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். அப்பா நான்கு வயதில் இருந்து இந்தத் துறையில் இருக்கிறார். அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என எனக்குத் தெரியும்” என்று கூறி இருக்கிறார். #ShrutiHaasan

    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன், தனக்கும், அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார். #ShrutiHaasan
    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சுருதி ஹாசன் அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

    ‘ சினிமாவில் நான் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கதாபாத்திரத்திலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

    மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் ஆன்மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலாயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.



    அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்.

    தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.

    நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன் ’ என்றார். #ShrutiHaasan

    ×