search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட் நீதிபதி"

    அமெரிக்க செனட் சபை பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை நேற்று உறுதி செய்துள்ளது. #DonaldTrump #BrettKavanaugh #SupremeCourt
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இதற்கிடையே, அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரெட் கவனாக்குக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

    இந்நிலையில், நேற்று கூடிய அமெரிக்காவின் செனட் சபையில் பிரெட் கவனாக்க்கு ஆதரவாக 50 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் செனட் சபை அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை உறுதி செய்துள்ளது. #DonaldTrump #BrettKavanaugh #SupremeCourt
    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்கவுள்ள இந்திரா பானர்ஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. #IndiraBanerjee #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் இந்திரா பானர்ஜி. ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோருடன் இந்திரா பானர்ஜியையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 

    கொலிஜியத்தின் பரிந்துரையை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்நிலையில், ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை முதல்வர் எடப்பாடிபழனிசாமி இன்று சந்தித்தார்.

    அப்போது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்கவுள்ள அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    இந்திரா பானர்ஜி கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee
    #EdappadiPalaniswami
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். #IndiraBanerjee #SupremeCourt
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. 
    கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, வரும் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன. 

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

    மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் பெயரையும் இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

    ஏற்கனவே, கே.எம்.ஜோசப் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. #Collegium #IndiraBanerjee #KMJoseph
    நீதிபதி ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Collegium #JusticeJosephElevation
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட  ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலிஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

    இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மீண்டும் கொலிஜியம் கூடியது. இக்கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.

    இதையடுத்து கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் கொலிஜியம் கூட்டம் இன்று மதியம் 1 மணியளவில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில்  நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கொலிஜியம் குழுவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அதற்கு முன்பு கொலிஜியம் கூட்டம் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிகிறது. #Collegium #JusticeJosephElevation
    ×