search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன்மலை முருகன் கோவில்"

    • விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
    • திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது.விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.கோவிலில் நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹாரத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருகல்யாண வைபவம் நடந்தது.திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, ேஹாமம் வளர்க்கப்பட்டு, மாங்கல்ய வழிபாடு செய்யப்பட்டது. திருக்கல்யாண வைபவ முடிவில் முருகப் பெருமானுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைசியாக பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்தனர்.திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் ஏற்பாடுகளை சிவன்மலை கந்த சஷ்டி விரத குழுவினர் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காங்கயம் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    • கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
    • 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி முதல் காலை மணி 10.30 மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தின் 8-ம் படைவீடு என்று முருக பக்தர்களால் வணங்கி வரும் இக்கோவில் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது
    • ஈரோட்டில் இருந்து கூடுதலாக செயல் அலுவலர் கவனித்து வருகிறார்.

    காங்கயம்:

    காங்கயம் சிவன்மலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான முருகர் - வள்ளி, தெய்வானை கோவில் உளளது.தமிழகத்தின் 8-ம் படைவீடு என்று முருக பக்தர்களால் வணங்கி வரும் இக்கோவில் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது.500 படிக்கட்டுகளில் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    தைப்பூசம்,வைகாசி விசாகம் ,கந்த

    சஷ்டி உள்பட முக்கிய விழா காலங்களில் பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்கின்றனர். பல லட்சம் ரூபாய் வரை நன்கொடை , பொருள் உபயம் (தங்கம், வெள்ளி ) உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.தங்க ரதம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.2 முறை மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கடந்த 1 1/4 வருடமாக பல முறை கோரிக்கை விடுத்தும் சிவன்மலை கோவில் நிர்வாகத்திற்கு என ஒரு செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை.

    ஈரோட்டில் இருந்து கூடுதலாக செயல் அலுவலர் கவனித்து வருகிறார் . அவரும் மாதம் 2முறை மட்டுமே சிவன்மலை கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். .இதனால் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,சேவகர்கள் ,உபய தாரர்கள் மற்றும் கோவிலின் அலுவலர்கள் ,ஊழியர்கள் என பலதரப்பட்டோரும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் கோவிலின் செயல்பாடுகள் ,நடைமுறை தகவல்கள் ஆகியவற்றை அறிய முடியாத நிலையும் நிலவி வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செயல் அலுவலர் நியமிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.
    • கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.

    நிகழ்ச்சி அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. காங்கயம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெளி உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கக் கூடாது என பக்தா்கள், பொதுமக்கள் கோவில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
    • திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் மலைக் கோவில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் மலைக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தா்கள், தாங்கள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுப் பொருள்களை கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு விநியோகித்து வந்தனா்.

    அவா்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்கள் எந்த அளவுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் தெரியாததால், வெளி உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கக் கூடாது என பக்தா்கள், பொதுமக்கள் கோவில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.இதையடுத்து, வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை இக்கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கக் கூடாது என சிவன்மலை முருகன் கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
    • அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

    இதில் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×