search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன்மலை முருகன் கோவிலில்  கந்தசஷ்டி விழா-   14-ந்தேதி தொடக்கம்
    X

    கோப்புபடம். 

    சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா- 14-ந்தேதி தொடக்கம்

    • கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
    • 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி முதல் காலை மணி 10.30 மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×