search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகளை சீரமைப்பு"

    • விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள கிராம பகுதிகளில் சேத மடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில், பல சாலைகள் சேத மடைந்துள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பலமுறை எடுத்துகூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கிராம பகுதியில் சேதம டைந்துள்ள சாலை களை உடனே சீரமைக்க வலியுறுத்தி, காரைக்கால் விடுதலை சிறுத்தை கட்சியினர், 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திருநள்ளாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதனைத் தொடர்ந்து, வி.சி.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×