search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகிப் அல் ஹசன்"

    • சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர்.
    • வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

    வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒரு நபராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாதாரண உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக நடுவர் முன்பிருந்த ஸ்டம்பை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்த ஷாகிப் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் கூறிய ஷாகிப் அல் ஹசன் அவருக்கு அவுட் கொடுக்குமாறு கேட்டு வாங்கியது மற்றுமொரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்டவரை விட 1.50 லட்சம் வாக்குகள் பெற்று சாகிப் எம்.பி. ஆனார். இந்நிலையில் ரசிகர் ஒருவரை சாகிப் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதுமே எங்களை மறந்து திமிராக நடந்து கொள்கிறீர்களா நீங்கள் எல்லாம் மனிதரா என்று ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    • லிட்டோன் தாஸ் கேப்டன் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார்.
    • சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

    முதல்நாள் முதல் செசனில் மட்டும் வங்காளதேசம் சற்று ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோர் அரைசதம் விளாசினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில், வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், கேப்டனுக்குரிய நபர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார்.


    டேனிஸ் கனேரியா கூறுகையில் ''லேசான காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபாடத் ஹொசைன் வெளியேறினார். எனினும், அதன்பின் களத்திற்குள் இறங்கிய அவருக்கு போதுமான அளவு பந்து வீசும் வாய்ப்பை சாகிப் அல் ஹசன் வழங்கவில்லை. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலித் அகமதுவை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஷிப் உயர்ந்த தரமாக இல்லை. வங்காளதேச வீரர்கள் அவரின் கேப்டன் பதவியின் கீழ் செயல்பட விரும்பவில்லை.

    லிட்டோன் தாஸ் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒருநாள் தொடரை எப்படி வென்றாடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    சட்டோகிராம் ஆடுகளம் வங்காள தேசத்தின் மற்ற ஆடுகளங்களை விட சற்று மாறுபட்டதாக உள்ளது. இங்கு வேகப்பந்து வீச்சு சற்று அதிகமாக எடுபடுகிறது. அவர் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் பந்து வீசுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவர் காயத்துடன் கட்டாயம் விளையாட வேண்டியது அவசியமா?. அவர்கள் இன்னும் ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கியிருக்கனும்'' என்றார்.

    ×