search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச கால்பந்து சம்மேளனம்"

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் தரவரிசை பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்தது. #FIFA #Belgium
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்தது. அந்த அணி 1727 புள்ளிகளுடன் உள்ளது. 2-வது இடத்தில் உலக சாம்பியன் பிரான்சும் (1726), 3-வது இடத்தில் பிரேசிலும் (1676) உள்ளன. இந்த ஆண்டு ரஷியாவில் நடந்த 2-வது கோப்பை போட்டியில் பெல்ஜியம் சிறப்பாக விளையாடியது.

    ஆனாலும் 3-வது இடத்தையே பிடித்தது. அந்த அணி அரை இறுதியில் பிரான்சியடம் தோற்றது. குரோஷியா, இங்கிலாந்து, போர்ச்சுகல், உருகுவே, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடத்தில் உள்ளன. #FIFA
    உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது. #KylianMbappe #AntoineGriezmann
    பாரீஸ்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

    இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும். இதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான எம்பாப்பே, கீரிஸ்மேன் ஆகியோருக்கு இடம் கிடைத்து உள்ளது. இருவரும் இந்த உலக கோப்பையில் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர். இதேபோல பிரான்ஸ் நாட்டின் பின்கள வீரரான ரபெல் வரனேயும் அந்த பட்டியலில் உள்ளார்.

    உலக கோப்பையில் 6 கோல்களை அடித்து விருது பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனும் இடம் பெற்றுள்ளார்.

    லியோனல் மெஸ்சி, கிறிஸ்டினோ ரொனால்டோ ஆகியோருடன் இவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு இடம் இல்லை.



    உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 வீரர்கள் விவரம்:-

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்பே, கிரீஸ்மேன், ரபெல் வரெ (பிரான்ஸ்), ஈடன் ஹசாட், கெவின் டிபுருயன் (பெல்ஜியம்), ஹாரிகேன் (இங்கிலாந்து) மோட்ரிச் (குரோஷியா), முகமதுசாலா (எகிப்து). #KylianMbappe #AntoineGriezmann
    இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தில் நடுவருக்கு எதிராக கருத்தை விமர்சித்த மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிபு கேட்டுள்ளார். #Maradona #FIFA2018
    கால்பந்து ஜாம்பவான் மரடோனா (அர்ஜென்டினா) உலககோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா விளையாடிய ஆட்டத்தை நேரில் பார்த்தபோது அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டனார்.

    நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றபோது ஆபாச சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தை மரடோனா விமர்சனம் செய்தார். இதில் இங்கிலாந்து பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றியை திருடிவிட்டது என்றும் நடுவர் ஜிஜெர் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து மரடோனாவுக்கு சர்வதேச கால் பந்து சம்மேளனம் (பிபா) கடும் கண்டனம் தெரிவித்தது.



    இந்த நிலையில் மரடோனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் சொன்ன கருத்து ஏற்று கொள்ள முடியாதது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். நடுவர்களின் பணியை நான் மிகவும் மதிக்கிறேன். நடுவர்களாக செயல்படுவது என்பது சாதாரணமான வேலை அல்ல என்று கூறியுள்ளார். #Maradona #FIFA2018
    ×