search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் கூடத்தில்"

    • ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி (வியாழக்ழமை) முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலர்களுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    முதல்-அமைச்சர் வரும் 15-ந் தேதி காலை உணவுத் திட்டத்தினைதொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் அமைந்துள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2649 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படி ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தில் காலை உணவு சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.

    இத்திட்டம் வரும் 16-ந் தேதி முதல் ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட 26 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார். மேலும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்மு கஉதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், ஈரோடு மா வட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×