search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி"

    • சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தருமபுரி வட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் தருமபுரி வட்டாரத்தில் ஊட்டச்சத்து பகுதியாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பனர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், மஞ்சள் குங்குமம் வைத்து கைகளுக்கு வளையல் அணிவித்தனர்.

    மேலும் பரிசு பொருள்கள் வழங்கி அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவினையும் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், மருத்துவ பரிசோதனைகள் குறித்த அறிவுரைகளையும் வழங்கினர்.

    • அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தொடங்கி வைத்தார்
    • சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட உதவியாளர் சாஜி வரவேற்று பேசினார்.

    இதில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். கவுன்சிலர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் சுலைமான் நன்றி கூறினார்.

    ×