search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
    X

    கன்னியாகுமரியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

    • அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தொடங்கி வைத்தார்
    • சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கன்னியாகுமரி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட உதவியாளர் சாஜி வரவேற்று பேசினார்.

    இதில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். கவுன்சிலர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் சுலைமான் நன்றி கூறினார்.

    Next Story
    ×