search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர் கடிதம்"

    புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். #PuducheryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமி தலைமையில் 3வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.



    அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  #PuducheryCMDharna #KiranBedi
    திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கைது பற்றிய தகவல்களை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. #SpeakerDhanapal #Karunas
    சென்னை:

    தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம்சாட்டி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை, அவரது சாலிகிராமம் வீட்டில் வைத்து 23-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டால், சட்டசபை விதிகளின்படி அதுகுறித்து சபாநாயகரிடம் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், சபாநாயகர் ப.தனபாலுக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கைது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தபால் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    அதுபோல கருணாஸ் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையின் விவரங்கள் பற்றி சிறைத்துறை ஐ.ஜி., சபாநாயகர் ப.தனபாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சபாநாயகருக்கு தபால் மூலம் வரப்பெற்ற கடிதங்களில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள், அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை பற்றிய விவரங்கள் உள்ளன.

    எம்.எல்.ஏ. கைது பற்றிய தகவல்களை அவை விதிகளின்படி, மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. இதில், இ-மெயில் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.  #SpeakerDhanapal #Karunas

    ×