search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தீப் ரெட்டி வங்கா"

    • நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படம் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இப்படம் ஒரு தரப்பில் பாராட்டை பெற்றாலும் பலர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஆணாதிக்கம் மற்றும் இந்துத்துவத்தை தாங்கி பிடிக்கும் காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.


    இந்த நிலையில், சமூகத்தில் உரையாடல் தொடங்கும் வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார். நேர்காணலில் கலந்து கொண்ட ரன்பீர்கபூர், "சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் குறித்து 'அனிமல்' படம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் தவறு நடக்கும்போது, அது தவறு என்று நாம் காட்டாவிட்டால், சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது" என்று கூறினார்.

    • ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’.
    • இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.

    சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் 'அனிமல்'. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாபிதியோல், டிருப்தி டிம்ரி, அனில்கபூர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.


    தந்தை, மகன் பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.

    அனிமல் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, 'அனிமல்' படத்தின் காட்சியில் கணவராக நடிக்கும் ரன்பீர்- டிருப்தி டிம்ரியுடன் தூங்கியதால் ரன்பீர் கன்னத்தில் உண்மையாக அறைந்தேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. 'ஆக்ஷனும்', 'கட்டுக்கும்' இடையில் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.


    காட்சி முடிந்ததும் நான் உண்மையாக அழுதேன். ரன்பீரிடம் சென்று அது சரியா? நலமாக இருக்கிறீர்களா? என்றேன். காட்சியில் நான் நடிகையாக இருப்பதன் உச்சத்தை உணர்ந்தேன். 'அனிமல்' படத்திலும் காட்சியிலும் நான் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.

    • ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அனிமல்'.
    • இந்த படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில், அனிமல் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா 'அனிமல்' திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


    இதற்கு முன்பு 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பத்மஸ்ரீ ஜாவெத் 5 முறை தேசிய விருதுகளை வென்றவர்
    • ஆணாதிக்க காட்சியமைப்புகள் அதிகம் இருந்தும் அனிமல் வெற்றி பெற்றது

    இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

    5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

    தற்போது 78 வயதாகும் ஜாவெத், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம், தனது கருத்துக்களை கூற தயங்காதவர்.

    மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் நகரில் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜாவெத்திடம் தற்கால திரைப்படங்களின் தரம் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

    படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் ரசிகர்கள்தான் பொறுப்பு. தற்காலத்தில் வெற்றி பெறும் படங்களின் தரம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது.

    எந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

    அப்போதுதான் எந்த வகையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என கலைஞர்கள் முயற்சி செய்வார்கள். படங்களில் வரும் தார்மீக எல்லைக்குட்பட்ட விஷயங்களை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது.

    இவ்வாறு ஜாவெத் கூறினார்.

    கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகி இந்தியா மற்றும் உலகெங்கும் வெளியான, "அனிமல்" இந்தி படம் உலகெங்கும் வசூலை அள்ளி குவித்தது. ஆனால், வன்முறை காட்சிகளும், ஆணாதிக்க காட்சியமைப்புகளும் அதில் அதிகம் இடம் பெற்றிருந்தது.

    பல எதிர்மறை விமர்சனங்களையும் மீறி அனிமல் வெற்றி பெற்றது.

    இப்பின்னணியில், திரைப்பட ரசிகர்களை குறித்த ஜாவெத் அக்தரின் கருத்து பார்க்கப்படுகிறது.

    • அனிமல் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது
    • நானே எழுதுவதால் கதை சொல்லவே எனக்கு பல நாட்கள் ஆகும் என்றார் சந்தீப்

    கடந்த 2023 டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகளவில் வெளியானது.

    அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். மிக பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது.

    இதை தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி, "ஸ்பிரிட்" எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதில் "பாகுபலி" திரைப்பட கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தனது விருப்பங்கள் குறித்து சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்ததாவது:

    சிரஞ்சீவி மற்றும் ஷாருக் ஆகியோரை இயக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு கனவு நாயகர்கள். எப்போது இயக்குவேன் என தெரியாது, ஆனால் நிச்சயம் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவேன்.

    பலருடன் இணையாமல் நானே கதை எழுதுவதால் எனக்கு ஒரு நடிகரிடம் கதை சொல்லவே பல மாதங்கள் ஆகிறது.

    சிரஞ்சீவி, ஷாருக் ஆகியோரை ஈர்க்கும் நல்ல அழுத்தமான கதையுடன் எவராவது என்னிடம் முன்வந்தால் உடனே இயக்கவும் தயாராக உள்ளேன். அவ்வாறு கதை கிடைத்தால் 9 மாதங்களில் படத்தை முடித்து விடுவேன்.

    இவ்வாறு சந்தீப் கூறினார்.

    • சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • ’அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியனது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'அனிமல்' திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் ஜனவரியில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நடிகர் ரன்பீர் கபூர் மறுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, "நான் ஆடியோ டீசரில் 'சூப்பர் ஸ்டார்' என்ற டேக்கை இணைத்திருந்தேன் இதை பார்த்த ரன்பீர் அந்த டேக்கை எடுக்கும் படி கூறினார்.


    ஆனால், நான் இது என்னுடைய உணர்வு என்று ரன்பீரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் ஒன்றாக வேலை பார்த்த மூன்று வருடங்களில் ரன்பீர் இதை மட்டும் தான் மறுத்துள்ளார். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் நான் செய்வேன் என்று அந்த டேக்கை இணைத்தேன்" என கூறினார்.


    மேலும், "நான் ரன்பீர் கபூரின் பல படங்களை ஹைதராபாத்தில் பார்த்திருக்கிறேன். அவரை கொண்டாடும் ரசிகர்களை பார்த்திருக்கிறேன். ஒரு நட்சத்திரத்திற்கு மட்டுமே அந்த வரவேற்பு கிடைக்கும். ரன்பீருக்கு 'சூப்பர் ஸ்டார்' டேக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னிடம் ஏன் அந்த டேக்கை கொடுத்தோம் என்று கேட்கவில்லை" என்று கூறினார்.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    இந்நிலையில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, 'அனிமல்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் இந்த பாகத்திற்கு 'அனிமல் பார்க்' என பெயர் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை த்ருப்தி டிம்ரி, "ரன்பீருடன் வரும் நெருக்கமான காட்சிகளில் என் பெற்றோர் சற்று அசவுகரியம் அடைந்தார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். இதை நீ செய்ய வேண்டாம், இருந்தாலும் ஓகே என்றார்கள்.


    பின்னர் நான் அவர்களிடம், "நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். அதையே நான் செய்தேன்" என்று புரிய வைத்தேன் என்றார். த்ருப்தி டிம்ரி 'அனிமல்' திரைப்படத்தில் ஜோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு ஊடக விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்தனர்
    • விமர்சகர்கள், அனிமல் இயக்குனரிடம் திரைப்பட வகுப்பு பயில வேண்டும் என்றார் ஆர்ஜிவி

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்தி திரைப்படம் "அனிமல்" உலகமெங்கும் வெளியானது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெள்ளித்திரையில் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

    ஆனால், "அனிமல்" திரைப்படத்தை எழுத்து, சமூக, காட்சி உள்ளிட்ட அனைத்துவிதமான ஊடகங்களிலும் பல பிரபல விமர்சகர்கள் கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஏராளமாக வன்முறை சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தரமான திரைப்படமல்ல என்றும் குறை கூறி இயக்குனரை விமர்சித்திருந்தனர்.

    இந்நிலையில், "அனிமல்" திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக போகும் புதிய திரைப்படங்கள் "அனிமல்" வசூலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும், அதற்குள் இப்படம் மேலும் பல கோடிகள் வசூலில் குவிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இப்பின்னணியில் "ஆர்ஜிவி" என அழைக்கப்படும் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma), திரைப்பட விமர்சகர்களை கடுமையாக தாக்கி கருத்து கூறியுள்ளார்.

    விமர்சகர்களுக்கு 5 அறிவுரைகளாக ஆர்ஜிவி தெரிவித்திருப்பதாவது:

    • இயக்குனரை காட்டிலும் படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்கள் மீது விமர்சகர்கள் முதல்முறையாக கோபமடைந்திருக்கிறார்கள்.
    • படு மோசம் என வர்ணிக்கப்பட்ட திரைப்படம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. இதன் மூலம் விமர்சகர்களின் திரைப்பட விமர்சனம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது உறுதியாகி விட்டது.
    • ரசிகர்களுக்கு விருப்பமானது எது என விமர்சகர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது.
    • அனைத்து விமர்சகர்களும் கை கூப்பி திரைப்படங்களை வர்ணிப்பது எப்படி என சந்தீப் ரெட்டி வங்காவிடம் கேட்டு கற்று கொள்ள வேண்டும்.
    • விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை பல முறை பார்த்து தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.  இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பெண் எம்.பி. ரஜ்சீத் ரஞ்சன் (Ranjeet Ranjan) மாநிலங்களவையில், "இளைஞர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வன்முறை காட்சிகளும் ஆணாதிக்க கதையமைப்பும் அதிகம் உள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு அளிக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    • ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    அனிமல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, "அனிமல்" திரைப்படம் ஐந்து நாட்களில் ரூ. 481 கோடியே வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்ததைத் தொடர்ந்து 'அனிமல்' திரைப்படமும் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • வரும் நாட்களில் பிற ஹீரோக்களின் சாதனைகளை அனிமல் முறியடித்து விடும்
    • இது கடவுளின் கருணை என உணர்ச்சிகரமாக பாபி தியோல் பதிவிட்டுள்ளார்

    கடந்த டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" (Animal) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இவருடன் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    2023 ஆண்டிற்கான "முதல் நாள் வசூல்" சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தி திரையுலகில் தீபாவளி, பக்ரீத் போன்று விடுமுறை நாட்களில்தான் முன்னணி கதாநாயகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இது அவற்றின் வெற்றிக்கும் பெரிதும் உதவி வந்தது.

    ஆனால், அனிமல் திரைப்படம், விடுமுறை இல்லாத சாதாரண வார நாளில் வெளியிடப்பட்டும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த சில நாட்களில், இந்தி திரையுலகின் பிற முன்னணி ஹீரோக்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்றோரின் இவ்வருட வெற்றி படங்களின் வசூலை அனிமல் தாண்டி விடும் என திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இது குறித்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பாபி தியோல் கண் கலங்கி தனது உணர்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    அதில் பாபி தியோல், "ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகின் மற்றொரு முன்னணி கதாநாயகனும், பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், "பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்" என பாராட்டியுள்ளார்.

    தென்னிந்தியா, வட இந்தியா என பேதங்கள் இன்றி மக்கள் விரும்பும் திரைப்படங்கள் எந்த மொழியாக இருந்தாலும், நாடு முழுவதும் ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதும், அவை வசூலை அள்ளி குவிப்பதும் நல்ல முன்னேற்றம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×