search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்ய பிரதாசாகு"

    தேர்தல் பிரசாரம் நிறைவுபெறும் நாளான ஏப்ரல் 16-ந்தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPolls #SathyaPrathaSahoo #ElectionCampaign
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 21-ந்தேதி மட்டும் ரூ.5 கோடியே 21 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மொத்தம் ரூ.19 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரத்து 980 கைத்துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சிவிஜில் செயலி மூலம் தமிழகத்தில் இதுவரை 657 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 77 ஆயிரத்து 977 அரசு கட்டிடங்களின் சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள், பிரசார விளம்பர தட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டு 233 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் சுவர்களில் வரையப்பட்ட 1 லட்சத்து 43 ஆயிரத்து 930 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு 148 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட விளம்பரத்துக்கான செலவு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.

    பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க தேவையில்லை. அதற்கு மேல் எடுத்துச்செல்லும் போது அந்த பணத்துக்கான ஆவணங்களான ஏடிஎம் சீட்டு, வங்கி காசோலை விவரம், வங்கியில் பணம் எடுத்ததற்கான விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து ஏப்ரல் 16-ந் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம். மதுரையில் மட்டும் அன்று இரவு 8 மணி வரை பிரசாரம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #ElectionCampaign
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். #TNByPoll #SathyaPrathaSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமி‌ஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ளோம்.

    தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.



    தேர்தல் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ரூ.1500 பணம் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNByPoll #SathyaPrathaSahoo
    ×