search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டித்தீர்த்த மழை"

    • திருமங்கலம் அருகே நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் தரைப்பாலம் மூழ்கியது.
    • வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக டி.புதுப்பட்டி, சவுடார்பட்டி, கிழவனேரி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

    டி.புதுப்பட்டி கிராமத்தி லிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. அப்போது கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சக்திவேல் டூவிலரில் கோபாலபுரம் நோக்கி சென்றார். நடுபாலத்தில் சென்ற போது திடீரென மழைநீர் பாலத்தினை மூழ்க அடித்ததால் டூவிலருடன் தண்ணீரில் விழுந்து அலறினார்.

    தண்ணீரில் மூழ்காமல் இருக்க அருகேயிருந்த கருவேலமரத்தினை பிடித்து மிதந்தார். இதனை கண்ட கிராமமக்கள் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு படையினர் வருவதற்குள் தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே கிராமமக்கள் கயிறு மூலமாக மின்வாரிய ஊழியர் சக்திவேலுவை மீட்டனர். இருப்பினும் அவரது டூவிலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மேற்படி பாலத்தின் வழியாக யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தினர் .

    இதே போல் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழைநீர் வயல்வெளிகளில் புகுந்த தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோபாலபுரம் பகுதியில் கவுண்ட நதி குண்டாறு தூர்வாரப்படாத தால் மழை வெள்ளம் தரைப் பாலத்தின் மேல் சென்றதாகவும் ஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    • நேற்று பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    கூடலூர், மார்ச்.29-

    தேனி மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் கேரளாவின் ஒருசில மாவட்டங்களிலும் கோடைமழை பெய்து வருகிறது.

    நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டி பட்டி, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதி களில் சுமார் 1 மணி நேரத்து க்கும் மேலாக கனமழை பெய்தது. அதன்பிறகும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    வடுகப்பட்டி, முதலக்க ம்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதா னப்பட்டி, புதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல் அடுத்துள்ள வட்டக்கானல், வெள்ளக்கவி பகுதியில் பெய்த கன மழை காரண மாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று நீர்வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அருவியில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 72 கன அடி. திறப்பு 256 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடி. வரத்து 349 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2586 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 49.53 அடி. வரத்து 13 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 7, தேக்கடி 15.6, கூடலூர் 1, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 1.2, வைகை அணை 30.2, மஞ்சளாறு 10, பெரியகுளம் 3, வீரபாண்டி 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது

    ×