search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைவினை பொருட்கள்"

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் மாணவ பிரம்மாக்களின் கலைத்திறனை வெளிச் சத்திற்கு கொண்டு வரும் வகையில் ஆண்டு தோறும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளின் கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக் கான கண்காட்சியில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் சளைத்த வர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியை மிஞ்சும் வகை யில் மாணவர்கள் நூற்றுக் கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப் படுத்தி இருந்தனர்.

    பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர் நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் முகமது முஸ்தபா ஆகியோர் கண்காட்சி யினை பார்வையிட்டு மாணவர் களின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். துணி, அட்டை, பேப்பர் களால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

    • கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • இயக்குநர் சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ராமேசுவரம் வர்த்தகம் தெருவில் உள்ள ராஜராஜேசுவரி திருமண மகாலில் மாற்று திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் குத்துவிளக்கேற்றி ஏற்றி தொடங்கி வைத்தார். சுமார் 50 ஸ்டால்களில் அமைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள், அழகு சாதன பொருட்களை பார்வையிட்டு விற்பணையை தொடங்கி வைத்தார்.

    வருகிற 7-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அதிகளவில் கைவினை பொருட்களை விற்பதற்கு அமைச்சகத்தின் பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சென்னை மண்டல அதிகாரி பிரபாகரன், நாகர்கோவில் மாற்றுத்திறனாளி சேவை மைய உதவி இயக்குநர் ரூபசந்திரன், பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினை கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. 8-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புற கைவினைக் கலைகள் என்ற பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை கலைப் பொருட்களைச் செய்துவர தமிழாசிரியர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலை கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்தனர்.

    இந்த பொருட்களின் கண்காட்சியை தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தவுபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்திருந்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.

    ×