search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் தண்ணீர்"

    முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரள எல்லைப் பகுதியில் உள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழை பெய்யாத நிலையில் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்த வருடமாவது ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மழையை நம்பி விவசாயப்பணிகளை தொடங்க விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. 260 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை 50 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 100 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 36.38 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.40 அடியாக உள்ளது. 31 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.11 அடியாக உள்ளது. 3 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. வரத்து இல்லை. பெரியாறு 10, தேக்கடி 2.4, கூடலூர் 1.4, சண்முகாநதிஅணை 1, சோத்துப்பாறை 2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    ×