search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை இறப்பு"

    • சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார்.
    • குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ்(வயது 23). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்பு கமலேசுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கமலேஷ் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீர் வைத்திருந்தார். அந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாக கமலேசின் 2 வயது குழந்தை தடிவிட்டான். இந்த தண்ணீர் 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது கொட்டியது. இதில் அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே குழந்தையை அருகில் உள்ள அஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுபற்றி மண்டையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலனுடன் மாயமாகி கர்ப்பிணியான பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கம்மாள் (வயது 18). இவர் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வாலிபரை தீவிரமாக காதலித்து வந் தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கிடையே மகளுக்கு திருமண ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்தனர். இதனை அறிந்த ஜக்கம்மாள் கடந்த 23.5.2023 அன்று காதலன் பிரவீன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே–றினார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு–பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதி–மன்றத்திலும் வழக்கு நிலு–வையில் இருந்தது. இதற்கி–டையே மாயமான ஜக்கம் மாள் 7 மாத கர்ப்பிணியா–னார். மேலும் கோர்ட்டில் நடந்த வழக்கில் காதலன் பிரவீன்குமார் விடுதலையா–னார்.கர்ப்பிணியாக இருந்த ஜக்கம்மாள் தனது பெற் றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி ஜக்கம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஓரிரு நாளில் அந்த குழந்தைக்கு மூச்சு, பேச்சு இல்லாமல் போனது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதுதொடர்பாக ஜக்கம் மாள் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை இறந்த நிலையில் கழிவறையில் வைத்திருந்ததாகவும், தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இளம்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இரணியல்:

    குளச்சலை சேர்ந்த ஒரு பெண் கர்ப்பமான நிலையில் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். குழந்தை பரிசோதனை உட்பட அனைத்து சிகிச்சைகளையும் அந்த மருத்துவமனையில் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கர்ப்பிணியான இளம்பெண் நேற்று இரவு பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை இறந்த நிலையில் கழிவறையில் வைத்திருந்ததாகவும், தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இரணியல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் குழந்தையின் பெற்றோருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் சமரசம் ஏற்பட்ட நிலையில் குழந்தையின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    தற்போது மருத்துவமனை நிர்வாகம் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தையை பொதிந்து கழிவறையில் கிடத்தி இருப்பதாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்ததாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×