search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றலாம்"

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.
    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சீசன்களை கட்டும்.

    அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இன்னும் பொழியாததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மலை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு மட்டும் தண்ணீர் வரத்து தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளிக்க வந்த பயணிகள் அனைவரையும் வரிசையில் நின்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

    ×