search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருவித்துறை"

    • சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
    • திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குருஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த கோவிலில் இருநது திருடி செல்லப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளுக்கு யாக பூஜை நடந்தது.

    இதைத் தொடர்ந்து சித்திர ரத வல்லப பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மண்ட பத்தில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக செயல் அலுவலர் பாலமுருகன், உபயதாரர்கள் முன்னிலையில் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நடந்தது.

    மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா 22-ந் தேதி நடக்கிறது.
    • காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது.

    சோழவந்தான்

    மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானை தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது. அன்று காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.

    அன்று இரவு 9மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் விழா ஏற்பாடு களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×