search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம் கோட்டம்"

    • கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுநாள் வாரவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களையொட்டி, பொது மக்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பஸ்கள் என கூடுதலாக இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மொத்தம் 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 19 , 20 ஆகிய தேதிகளில் சென்னை தடத்தில் 100 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 19, 20 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறை ப்பூண்டி, வேதாரணியம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்க ளிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கபடும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, அவரவர் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொ ண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய  இடங்களிலிருந்து சென்னைக்கு நாளை 50 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    13-ந் தேதி 500 கூடுதல் பஸ்களும், 14-ந் தேதி 250 கூடுதல் பஸ்களும், மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை 100 கூடுதல் பஸ்களும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் 200 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பி செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகாளாய அமாவாசையை முன்னிட்டு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • மொத்தம் 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது..

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் மகாளாய அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி (சனிக்கிழமை) பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தேவகோட்டை, இராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, ஆகிய இடங்களிலிருந்து இராமே ஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதே போல் இராமேஸ்வரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் இரவு, பகலாக 150 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கவும், தஞ்சாவூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர், ஆகிய இடங்களிலிருந்து திருவையாறுக்கும் அதேபோல் திருவையாற்றிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களு க்கும் 25 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகாருக்கும், அதேபோல் பூம்புகாரிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப படுகின்றன.

    நாகப்பட்டினம், திருத்து றைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களிலிருந்து கோடியக்க ரைக்கும் அதேபோல் கோடியக்கரை யிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு பஸ்களும்,திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்தும் பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களிலிருந்தும் சமயபுரத்திற்க்கும் அதேபோல் சமயபுரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும் அதேபோல் ஸ்ரீரங்கத்திலி ருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கும் 50 கூடுதல் சிறப்புப் பஸ்கள் என மேற்படி அனைத்து தடங்களிலும் என மொத்தமாக 270 கூடுதல் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.இராமேஸ்வரம் செல்லவும் இராமேஸ்வரத்திலிருந்து திரும்ப வரவும் பயணிகள் முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும். எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்க கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியா ளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×