search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேஸ்வரம், திருவையாறு-பூம்புகாருக்கு 270 சிறப்பு பஸ்கள்
    X

    ராமேஸ்வரம், திருவையாறு-பூம்புகாருக்கு 270 சிறப்பு பஸ்கள்

    • மகாளாய அமாவாசையை முன்னிட்டு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • மொத்தம் 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது..

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் மகாளாய அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 14-ந் தேதி (சனிக்கிழமை) பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தேவகோட்டை, இராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, ஆகிய இடங்களிலிருந்து இராமே ஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதே போல் இராமேஸ்வரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் இரவு, பகலாக 150 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கவும், தஞ்சாவூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர், ஆகிய இடங்களிலிருந்து திருவையாறுக்கும் அதேபோல் திருவையாற்றிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களு க்கும் 25 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகாருக்கும், அதேபோல் பூம்புகாரிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப படுகின்றன.

    நாகப்பட்டினம், திருத்து றைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களிலிருந்து கோடியக்க ரைக்கும் அதேபோல் கோடியக்கரை யிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு பஸ்களும்,திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்தும் பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களிலிருந்தும் சமயபுரத்திற்க்கும் அதேபோல் சமயபுரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும் அதேபோல் ஸ்ரீரங்கத்திலி ருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கும் 50 கூடுதல் சிறப்புப் பஸ்கள் என மேற்படி அனைத்து தடங்களிலும் என மொத்தமாக 270 கூடுதல் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.இராமேஸ்வரம் செல்லவும் இராமேஸ்வரத்திலிருந்து திரும்ப வரவும் பயணிகள் முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும். எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்க கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியா ளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×