search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை சந்தை"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
    • திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திரு விழாவின் முக்கிய அம்சமாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந் நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் குதிரை சந்தை தொடங்கியது.

    அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி சந்தைத் திடலில், குதிரை சந்தை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை சந்தைக்கு பல்வேறு வகையான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

    அதேபோல், குதிரை சந்தை அமைந்துள்ள பகுதிகளில் விதவிதமான ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த குதிரை வண்டிகளின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்துவிட்டது. ஆனாலும், திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது
    • ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திரு விழாவின் முக்கிய அம்ச மாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பர வல் காரணமாக தீபத்திரு விழாவில் குதிரை சந்தை நடைபெறவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்து டன் குதிரை சந்தை நேற்று தொடங்கியது.

    அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி சந்தைத் திடலில், குதிரை சந்தை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற் பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள் ளன. அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால் நடை சந்தைக்கு பல்வேறு வகையான மாடுகள் விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டுள்ளன.

    அதேபோல், குதிரை சந்தை அமைந் துள்ள பகுதிகளில் விதவிதமான ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை யிட்டனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த குதிரை வண்டிக ளின் பயன்பாடு பெரும் பாலும் குறைந்துவிட்டது.ஆனாலும், திருவண்ணா மலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், குதிரை சந்தை மற்றும் கால்நடை சந்தையில், சிறப்பு கால் நடை மருத்து முகாம் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு கொண்டுவ ரும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோ திக்கப்படுகிறது.

    • கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது.இ க்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மற்றும் அதையொட்டி நடைபெறுகின்ற குதிரை சந்தை, பாரம்பரிய கால்நடை சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.த ற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதி கரித்து வரும் நிலையில், திருவிழாவின் போது தமி ழகம் மட்டும் இன்றி அண்டை மாநி லங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் எதி ர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டும் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.மேலும் சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ×