search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா விற்ற"

    • போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • கடையில் 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மூங்கில்பாளையம் வின்டெக்ஸ் நகரில் துரைசிங் (31) என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது.

    இந்த கடையில் அரசால் தடைசெய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வியாபாரி துரைசிங்கை கைது செய்தனர். மேலும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த மாக்கல்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (44). அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து ள்ளார்.

    இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் சோதனை நடத்திய போது 324 குட்கா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தோப்பூரை சேர்ந்த ஜெகதீசன் (35) என்பவரிடம் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி பொன்னுசாமி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பொன்னுசாமி தனது கடைக்கு குட்கா பொரு ட்களை கொண்டு வர போன் மூலம் ஜெகதீசனுக்கு கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த ஜெகதீசனை போலீசார் சோதனை செய்ததில் 599 குட்கா பொட்டலங்கள் கொண்டு வந்து இருப்பது தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து பொன்னுசாமி, ஜெகதீசன் ஆகிய 2 பேர் மீதும் ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,560 மதிப்புள்ள 923 குட்கா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×