search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானி கால்வாயில்"

    • கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது
    • கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும்

    பெருந்துறை

    ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது.

    இப்பேரணி கோபி அருகே உள்ள குருமந்தூரில் இருந்து புறப்பட்டு இறுதி யாக சென்னிமலையில் நிறைவடைந்தது. இப்பேர ணிக்கு பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், பெத்தா ம்பாளையம் ரோடு பிரிவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    நம்பியூர் அடுத்த குரும ந்தூர் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் 34 கசிவு நீர் திட்ட பாசன விவ சாயிகளை பாதுகாக்க கோரியும், கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்த க்கோரியும், கால்வாயில் உள்ள பழைய கட்டுமான ங்களை உள்ளது உள்ளபடி சீரமைக்க வேண்டும்.

    கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாது காப்பு இயக்கம் சார்பில் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பகுதியில் கான்கிரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகன பேரணி நடந்தது. பேரணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த பேரணி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் இருந்து தொடங்கி கவுந்தப்பாடி, கோபி ச்செட்டிப்பாளையம், ஒத்த க்குதிரை வழியாக வந்து சென்னிமலையில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடி மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து கான்கிரீட் திட்ட பணிகள் தொடங்க ப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது.

    ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்க ளுக்கும் மேலாக பொது ப்பணித்துறை மற்றும் கட்டு மான நிறுவனம் கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்ற னர்.

    இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் மற்றும் அதிகாரி கள் கூறியபடி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும்.

    மேலும் கான்கி ரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276யை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி கீழ் பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் இன்று காலை கீழ்பவானி கால்வாயின் கரையில் 100-க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதை தொடர்ந்து அவர்கள் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276-யை ரத்து செய்ய வேண்டும். அரசு அளித்த வாக்குறுதியின் படி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×