search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "open water in"

    • பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடி மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து கான்கிரீட் திட்ட பணிகள் தொடங்க ப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது.

    ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்க ளுக்கும் மேலாக பொது ப்பணித்துறை மற்றும் கட்டு மான நிறுவனம் கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்ற னர்.

    இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் மற்றும் அதிகாரி கள் கூறியபடி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும்.

    மேலும் கான்கி ரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276யை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி கீழ் பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் இன்று காலை கீழ்பவானி கால்வாயின் கரையில் 100-க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதை தொடர்ந்து அவர்கள் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276-யை ரத்து செய்ய வேண்டும். அரசு அளித்த வாக்குறுதியின் படி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×