search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் விழுந்து சாவு"

    • கிணற்றில் அடையாள தெரியாத ஆண் சடலம் இருப்பதாக வேப்ப னப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கட்டிட மேஸ்திரியான சிவா கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன பூதிமுட்லு பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவ ருடைய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் சடலம் இருப்பதாக வேப்ப னப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் இது குறித்து விசாரனை மேற்கொண்டனர்.

    அப்போது கிணற்றில் கிடந்த வாலிபர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சிவா (வயது27). கட்டிட மேஸ்திரி யாக வேலை செய்து வந்தார் என்பது தெரியவந்தது.

    பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவா கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    வந்தவாசி:

    தெள்ளாரை அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன்(32). இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சங்கீதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற ராமநாதன் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.

    இந்த நிலையில் மருதாடு கிராமத்தில் வசிக்கும் சங்கீதாவின் தந்தை மூர்த்தி தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

    அப்போது அந்த நில கிணற்றில் குப்புற கவிழ்ந்த நிலையில் ராமநாதன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீச்சல் தெரியாத ராமநாதன் குளிக்கும்போது கிணற்றினுள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின் மோட்டாரை சரி செய்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    சின்ன கந்திலி ஒன்றியம் கண்ணாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 67), ஓய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது கிணற்றில் இறங்கி மோட் டாரை சரி செய்ய முயன்ற போது கால் தவறி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உள்ளார்.

    நேற்று காலை வீட் டில் பன்னீர்செல்வம் இல்லா ததை கண்டு வீட்டில் உள்ள வர்கள் தேடி பார்த்தனர். அப் போது அவர் கிணற்றில் விழுந்து உள்ளது தெரிய வந்தது.

    உடன டியாக இதுகுறித்து தீயணைப் புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று பன்னீர் செல்வத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து கந்திலி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×