என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
- விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
வந்தவாசி:
தெள்ளாரை அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன்(32). இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சங்கீதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற ராமநாதன் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் மருதாடு கிராமத்தில் வசிக்கும் சங்கீதாவின் தந்தை மூர்த்தி தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
அப்போது அந்த நில கிணற்றில் குப்புற கவிழ்ந்த நிலையில் ராமநாதன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீச்சல் தெரியாத ராமநாதன் குளிக்கும்போது கிணற்றினுள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்